Sunday, July 30, 2023

40 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்களில் இலங்கையில்

40 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்களில் இலங்கையில் , •2000வரையிலான அப்பாவி தமிழர் கொல்லப்பட்டனர் •600 வரையிலான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர் •5000வரையிலான தமிழர் கடைகள் அழிக்கப்பட்டன •1800 வரையிலான தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. •பலத்த காவலில் சிறையில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். இத்தனையும் சிங்கள அரசே திட்டமிட்டு பொலிஸ் மற்றும் ராணுவத்தின் முன்னிலையில் அவற்றின் உதவியோடு செய்தது. நடந்தது இனப்படுகொலை. ஆனாலும் இன்றுவரை சிங்கள அரசும் இந்திய அரசும் இதனை இனக்கலவரம் என்றே கூறிவருகின்றன. இப்போது மணிப்பூரிலும் இதுவே நடக்கிறது. எல்லோரும் ஒரு பெண் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டது பற்றியே பேசுகின்றனர். யாருமே அப் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரன் கொல்லப்பட்டது பற்றி பேசுவதில்லை. பொலிஸ் முன்னிலையில் பொலிஸ் உதவியுடனே இது நடக்கிறது என்பதையும் பேசுவதில்லை கடந்த பல மாதங்களாக இனப் படுகொலைகளால் மணிப்பூர் பற்றி எரிகிறது என்பதையும் பேசுவதில்லை.

No comments:

Post a Comment