Sunday, July 30, 2023

முதலில் கூறினார்கள்,

முதலில் கூறினார்கள், புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தை நினைக்க மாட்டார்கள் என்று அடுத்து கூறினார்கள் , ஒரு சிலர் வயதாகும்வரை நினைப்பார்கள். அப்புறம் யாருமே நினைக்க மாட்டார்கள் என்று இறுதியாக கூறினார்கள், இந்த சந்ததிதான் நினைக்கும் அடுத்த சந்ததி ஒருபோதும் நினைக்காது என்றார்கள். ஆனால் இவ்வாறு கூறியவர்கள் வாயடைத்து ஆச்சரியமாய் பார்க்கும் அளவிற்கு புலம்பெயர் சமூகத்தின் அடுத்த சந்ததி போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆம். நேற்றைய தினம் 40 வருடங்களுக்கு முன்னர் அதாவது தாம் பிறக்கு முன்னர் தம் இனத்தில் நடந்த 1983 இனப் படுகொலைகளை லண்டனில் அடுத்த சந்ததி இளையவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். மிகவும் நேர்த்தியாக நிகழ்வை நடத்தியுள்ளனர். உலகிற்கு என்ன மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் பேச ஆரம்பித்துள்ளனர். இனி உலகம் செவிடாக இருக்க முடியாது. இந்த இளையவர்களின் குரலைக் கேட்டேதான் ஆக வேண்டும். நம்பிக்கை அளிக்கும் மாற்றம்.

No comments:

Post a Comment