Sunday, July 30, 2023

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது மணிப்பூர் தனிநாடாக இருந்தது. 1948ல் மணிப்பூரில் தேர்தல் நடந்து அங்கு ஓர் மக்களாட்சி அரசு அமைந்தது. 1949ல் இந்திய அரசானது மணிப்பூர் அரசரை பேச்சுவார்த்தைக்கு என அழைத்து மிரட்டி இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தை போட்டது. தன்னை ஜனநாயகநாடு என பீற்றிக்கொள்ளும் இந்திய அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணிப்பூர் அரசைக் கலைத்தது. அன்று முதல் மணிப்பூர் மக்கள் தனிநாடுக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 1958ல் இந்திய அரசால் போடப்பட்ட சிறப்பு ஆயுத தடைச் சட்டத்தால் இதுவரை ஆயிரக்கணக்கான மணிப்பூர் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்திய துணை ராணுவக் குழுக்களால் பல மணிப்பூர் பெண்கள் பாலியல் வல்லறவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கெதிராக மணிப்பூர் பெண்கள் நிர்வாண போராட்டம்கூட செய்துள்ளனர். ஆனால் இதை எல்லாம் மறைத்து எதோ இரு பெண்களுக்கு கொடுமை நடந்திருப்பதாகவும் அதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறுகின்றார். எதிர்க்கட்சிகளும்கூட இதனை மத மோதலாகவும் அதற்காக மாநில பாஜக அரசைக் கலைக்க வேண்டும் என்றே கோருகின்றன. மாநில அரசைக் கலைப்பதாலே அல்லது இரு பெண்களுக்கு நடந்த கொடுமைக்கு மட்டும் நடவடிக்கை எடுப்பதாலோ மணிப்பூர் பிரச்சனை தீரப் போவதில்லை. தோழர் தமிழரசன் குறிப்பிட்டதுபோன்று தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவே இந்திய ஒன்றியம் இருக்கிறது. எனவே பலவந்தமாக இணைக்கப்பட்ட மணிப்பூர் மக்களின் இறையாண்மையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். அனைத்து தேசிய இனங்களின் பிரிந்து போவதற்கான உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையுடன் ஒன்றிணைப்பு ஏற்பட வேண்டும்.

No comments:

Post a Comment