Saturday, July 15, 2023

இந்த பொருளாதார நெருக்கடியிலும்

இந்த பொருளாதார நெருக்கடியிலும் ஒருபுறம் நாடு நாடாக ஓடி ஓடி பிச்சை எடுத்துக்கொண்டு மறுபுறம் வடக்கு கிழக்கு தமிழர் நிலங்களில் புத்தவிகாரை கட்டுகின்றது சிங்கள அரசு. மகிந்தா வந்தால் என்ன, ரணில் வந்தால் என்ன, யார் ஜனாதிபதியாக வந்தாலும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் மட்டும் மாறுவதில்லை. இதற்கு எதிராக மக்களை திரட்டி போராட வேண்டிய எம் தலைவர்களோ இந்திய அரசுக்கு கடிதம் எழுதுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். அந்த இந்திய அரசின் ஆதரவுடனும் உதவியுடனும்தான் இந்த தமிழின அழிப்பை சிங்கள அரசு மேற்கொள்கின்றது என்பதை நன்கு தெரிந்தும் தொடர்ந்தும் கடிதம் எழுதுவதையே போராட்டமாக நினைக்கின்றனர். ஆனால் இந்திய அரசோ கடிதம் கிடைத்தது என்றுகூடப் பதில் தருவதில்லை. அந்தளவு இறுமாப்புடன் அது நடந்து கொள்கிறது. அதாவது இந்த நாய்களை(தமிழ் தலைவர்களை) எவ்வளவுதான் எட்டி உதைத்தாலும் தொடர்ந்தும் காலடியில் கிடந்து விசுவாசமாக வாலாட்டும் என இந்திய அரசு நன்கு தெரிந்து வைத்துள்ளது. சிலர் கேட்கிறார்கள் “ சிஙகள நிலத்தில் பல இந்துக் கோயில்கள் இருக்கும்போது தமிழர் நிலத்தில் புத்த விகாரை இருந்தால் என்ன தவறு ? என்று. சிங்களவர்கள் பெரும்பான்மையினர். அவர்கள் மத்தியில் எத்தனை இந்துக் கோவில்கள் இருந்தாலும் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் தமிழர் சிறுபான்மையினர். தமிழர் நிலத்தில் கட்டப்படும் புத்த விகாரைகள் தமிழின அழிப்பை நோக்கமாக கொண்டவை.

No comments:

Post a Comment