Saturday, July 15, 2023

செய்தி – "கிழக்கு மாகாண ஆளுநனர்

செய்தி – "கிழக்கு மாகாண ஆளுநனர் செந்தில் தொண்டமான் தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம்" - ஐபிசி முதலாளி கந்தையா பாஸ்கரன் ஒருவன் அயோக்கியன் என தெரிந்தும் அவனை நியாயப்படுத்த முயல்பவன் அவனைவிட அயோக்கியன் - சே இந்த கிழக்கு மாகாண ஆளுனர் தமிழர் என்றும் அதனால் தமிழினத்தின் வலியை நன்கு உணர்ந்தவர் என்றும் ஐபிசி முதலாளி கூறியுள்ளார். இந்த கிழக்கு மாகாண ஆளுனர்தான் அண்மையில் இந்தியா சென்று இலங்கையிலும் ஒரு திருப்பதி கோயில் வேண்டும் என்று கேட்டவர். அதுமட்டுமல்ல இந்த கிழக்குமாகாண ஆளுனர்தான் கலைஞர் பிறந்தநாள் கொண்டாடப் போவதாக அறிவித்தவர். தன் மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்காத இந்த கிழக்கு மாகாண ஆளுனர், கிழக்கில் நடைபெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை தடுக்காத இந்த ஆளுனர், இந்துக் கோவில்களை இடித்துவிட்டு புத்த விகாரைகள் கட்டப்படுவதை தடுக்க முடியாத இந்த ஆளுனர் , தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என இந்த ஐபிசி முதலாளிக்கு எப்படி தெரிகிறது?

No comments:

Post a Comment