Saturday, July 15, 2023

காயம் இல்லாமல் கனவு காணலாம்.

காயம் இல்லாமல் கனவு காணலாம். ஆனால் வலிகள் இல்லாமல் வெற்றி பெற முடியாது. இந்திய அரசுக்கு கடிதம் எழுதி தீர்வு பெற முடியும் என இப்போது சிலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் அண்ணாமலைக்கு உறவுப்பாலம் கட்டி தீர்வு பெற முடியும் என நம்புகின்றனர். ஆனால் சிங்கள அரசின் பலாத்காரத்திற்கு எதிர் பலாத்காரத்தை பாவிக்காமல் எந்த தீர்வையும் பெற முடியாது என்பதை தமிழ் இளைஞர்கள் இன்பம் செல்வம் கொலை செய்யப்பட்டபோதே உணர்ந்து விட்டார்கள். ஆம். அடக்குமுறையை மேற்கொள்ளும் சிங்கள அரசு இயந்திரத்தை வன்முறைமூலம் உடைத்தெறியாமல் தமிழ் மக்கள் எந்தவொரு தீர்வையும் பெற்றுவிட முடியாது என்பதையே வரலாறு தொடர்ந்து நிரூபித்துக்கொண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment