Friday, October 20, 2023

ஈழத் தமிழர் பிரச்சனையை

ஈழத் தமிழர் பிரச்சனையை தீர்க்கக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே என அண்ணாமலை கூறுகின்றார் ஆனால் உலகில் எங்கு இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டாலும் அதை கண்டித்து குரல் கொடுக்கும் மோடி ஈழத்தில் இந்துக்கோயில்கள் இடிக்கும்போது குரல் கொடுப்பதில்லை. குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மாறாக கோயில்களை இடிக்கும் அந்த சிங்கள அரசுக்கு கடன் கொடுத்து உதவி வருகிறார். கச்சதீவில் கிருத்தவ ஆலயத்திற்கு முன் வைக்கப்பட்ட புத்தர் சிலையை மன்னார் ஆயரால் அகற்ற முடிகிறது. ஆனால் இந்து ஆலயங்களை இடித்து அதில் புத்தர் சிலைகளை வைப்பதை மோடி ஏன் தடுப்பதில்லை? இது குறித்து அண்ணாமலையை லண்டனுக்கு அழைத்து உறவுப்பாலம் கட்டியவர்கள் கேட்க மாட்டார்களா?

No comments:

Post a Comment