Friday, October 20, 2023

வழக்கத்திற்கு மாறாக

வழக்கத்திற்கு மாறாக விதியை மீறி அசானிக்கு வாய்ப்பளித்தது ஜீ டிவி. சரிகமப நிகழ்வில் 5 முறை மட்டுமே பாட இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இவருக்கு இல்லை. ஆனாலும் வெற்றி பெறும் நபரைவிட அதிக புகழையும் பரிசில்களையும் இவர் பெற்றுவிட்டார். இதுவரை இப்படி யாருக்குமே நடக்காத நிலையில் முதன் முதலாக அசானிக்கு நடந்திருக்கிறது. இப்படி நடப்பதற்கு முக்கிய காரணம் அசானிக்கு ஈழத் தமிழர்கள் வழங்கிய ஏகோபித்த ஆதரவே. குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்த்துகளும் பரிசில்களும் வழங்கி அசானியை ஆதரித்து வருகின்றனர். ஈழத் தமிழர் மலையக தமிழரை வெறுத்து ஒதுக்குகிறார்கள் என சிலர் செய்யும் பிரச்சாரத்திற்கு ஈழத் தமிழர் தமது பாணியில் அளித்துள்ள பதில் இது. இந்த விஷம பிரச்சாரகர்கள் இனி என்ன சொல்லப் போகிறார்கள்?

No comments:

Post a Comment