Friday, October 20, 2023

தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டு

தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டு எந்தளவு கொடுமையானது என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். ஏனெனில் அந்த கொடும் வலியை அனுபவித்தவர்கள் ஈழத் தமிழர்கள். ஆனால் கொடுமை என்னவெனில் மகிந்த ராஜபக்சா ஈழத் தமிழர் மீது தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டு வீசிய போது அவருக்கு ஆதரவு தெரிவித்தது பாலஸ்தீனம் . இப்போது தன்மீது தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டு போடப்படுவதை சர்வதேசம் கண்டிக்க வேண்டும் எனக் கோருகின்றது. இதைவிடக் கொடுமை என்னவெனில் மகிந்த ராஜபக்சா ஈழத் தமிழர் மீது பொஸ்பரஸ் குண்டு வீசியதை கண்டிக்காத காங்கிரசும் திமுகவும் பாலஸ்தீனத்தில் பொஸ்பரஸ் குண்டு வீசப்படுகிறது என கண்ணீர் வடிக்கின்றன. இனியாவது ஈழத் தமிழர் அனுபவித்த வலியை இவர்கள் உணர்வார்களா?

No comments:

Post a Comment