Friday, October 20, 2023

சிறுமி – அங்கிள் நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

சிறுமி – அங்கிள் நீங்கள் நல்லவரா? கெட்டவரா? சுமந்திரன் - ஏன்மா அப்படி கேட்கிறே? சிறுமி – சிறுவன் பாலச்சந்திரனை ஏன் கொன்றார்கள்? சுமந்திரன் - அவர் அப்பா பயங்கரவாதி. எனவே மகனும் பயங்கரவாதி என்று கூறி கொன்றார்கள். சிறுமி - அப்படியென்றால் ஏன் பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீராவின் பிள்ளைகளையும் பயங்கரவாதிகள் என்று சுட்டுக் கொல்லாமல் படிக்க வைத்தார்கள்? சுமந்திரன் - ஆம் அவரது ஆறு பிள்ளைகளையும் மட்டுமன்றி மனைவியையும் பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். சிறுமி – பாலச்சந்திரன் தமிழர் என்பதால் கொல்லப்பட்டார். ரோகணாவின் பிள்ளைகள் சிங்களவர் என்பதால் கொல்லப்படவில்லை. எமக்கு நடந்தது இனப்படுகொலை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு? சுமந்திரன் - ???? குறிப்பு - இன்று உலகம் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடுகிறது. நாம் எப்போது கொல்லப்பட்ட எமது தமிழ் சிறுவர்களுக்குரிய நீதியை பெற்றுக்கொடுக்கப் போகிறோம்?

No comments:

Post a Comment