Sunday, October 29, 2023

மறப்பது மக்கள் வழமை

• மறப்பது மக்கள் வழமை நினைவூட்ட வேண்டியது நமது கடமை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருகிறது. ஆனால் சம்பந்தர் ஐயா கூறிய தீர்வுதான் இன்னும் வரவில்லை. முதலில் ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார். தீர்வு வரவில்லை. ஆனால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தது. அப்புறம் இரு வாரங்களில் தீர்வு குறித்து நல்ல செய்தி வரும் என்றார். அப்பவும் தீர்வு வரவில்லை. ஆனால் இரண்டாவது சொகுசு பங்களாவும் அதற்கு பெயிண்ட் அடிக்க 4 கோடி ரூபா பண ஒதுக்கீடு என்ற நல்ல செய்தியும் அவருக்கு வந்தது. அதன்பின்பு அடுத்த தீபாவளி பண்டிகை தீர்வு கிடைத்து மகிழ்வான சூழ்நிலையில் நடக்கும் என்றார். அடுத்த தீபாவளிகள் வந்து செல்கின்றன. ஆனால் அவர் கூறிய தீர்வும் வரவில்லை. தீபாவளி கொண்டாடக்கூடிய மகிழ்வான சூழ்நிலையும் தமிழ் மக்களுக்கு வரவில்லை. பொதுவாக, ஒரு பண்பான அரசியல் தலைவர், தான் கூறியது நடக்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்வார். சம்பந்தர் ஐயா பண்பான தலைவரும் இல்லை. அவர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நேர்மையான தலைவரும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் தான் சொன்னது ஏன் நடக்கவில்லை என்பதற்கு ஒரு விளக்கமாவது தமிழ்மக்களுக்கு கொடுக்க வேண்டாமா?

No comments:

Post a Comment