Sunday, October 29, 2023

சம்பந்தர் நாயனாரால் தேவாரம் பாடி

சம்பந்தர் நாயனாரால் தேவாரம் பாடி புகழ் பெற்ற வேதாரணியம் கோயில் ஈழத்தில் கரவெட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. பல ஆண்டுகாளாக அக் கோயில் அந்த ஈழத் தமிழரின் குடும்பத்தவர்களால் உரிமை பேணப்பட்டு வந்தது. ராஜீவ் காந்தி கொலையின் பின்னர் அப்போது வேதாரணியம் காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருந்த ராஜேந்திரன் போன்றவர்களால் அரசியல் செல்வாக்கின் மூலம் அவ் உரிமை பறிக்கப்பட்டது. வேதாரணியம் கோயில் உரிமையை பறித்தவர்கள் தஞ்சாவூர் ராஜராஜ சோழன் கோவில் உரிமையை பறிக்க முயலவில்லை. ஏனெனில் ராஜராஜசோழன் கோயில் உரிமை மராட்டிய வம்சத்தவரிடம் இருக்கிறது. வேதாரணியம் கோயில் உரிமை (ஈழ)தமிழரிடம் இருந்தது.

No comments:

Post a Comment