Friday, October 20, 2023

இன்னொரு நாட்டில் நடக்கும் சண்டைக்கு

இன்னொரு நாட்டில் நடக்கும் சண்டைக்கு தமிழகம் என்ன செய்ய முடியும் என கேட்ட திமுக உடன் பிறப்புகளுக்கு கீழே உள்ள படம் நல்ல பதிலாக இருக்கும். ஆனால் சில ஈழத் தமிழர் இந்த படத்தை போட்டு தமிழக மக்கள் இதேபோன்று செய்யவில்லையே என அங்கலாய்க்கின்றனர். இது தவறு. உலகில் எந்த இனமும் செய்யாததை தமிழக மக்கள் ஈழத் தமிழருக்காக செய்திருக்கின்றனர். ஆம். ஒன்றல்ல. இரண்டல்ல. மொத்தம் பதினேழு பேர் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தனர். ஆனால் இதையெல்லாம் மழுங்கடித்தவர் ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி. அவர் தீக்குளித்து இறந்தவர்களை காதல் தோல்வியில் இறந்தவர்கள் என தமது காவல்துறை மூலம் செய்தி பரப்பினார். மாணவர்கள் போராட முனைந்தபோது கல்லூரிகளுக்கு லீவு விட்டு விடுதிகளில் இருந்து மாணவர்களை பலவந்தமாக வெளியேற்றினார். போராடும் மக்களை தேடி தேடிப் பிடித்து பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தார். இரத்தம் அனுப்ப முயன்றவர்களைக் கூட தடுத்து நிறுத்தி கைது செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக 3 மணி நேரம் உண்ணாவிரத நாடகம் நடத்தி போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார். இவர் கூறிய பின்பே பல்லாயிரம் ஈழத் தமிழர் கொல்லப்பட்டது பற்றி கேட்டபோது “மழைவிட்டும் தூவானம் விடவில்லை” என பொறுப்பின்றி கூறினார். ஈழத் தமிழர் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டது உங்களுக்கு கவலை தரவில்லையா என கேட்டபோது சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் மரண ஓலம் கேட்டபோது இன்னொரு வீட்டில் திருமணம் நடந்தது என்று தம் பிள்ளைகளுக்கு பதவி ஏற்புவிழா நடத்தினார். எனவே தமிழக முதல்வர் என்ன செய்ய முடியும் எனக் கேட்கும் திமுக உடன்பிறப்புகளுக்கு கலைஞர் செய்த துரோகத்தை கூறுவதே சரியான பதிலாக இருக்கும். தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள். ஈழத்தில் தமிழினம் அழியும்போது தமிழக தமிழர் மனம் வாடாமல் இருக்குமா? நிச்சயமாக வாடியது. ஆனால் அதை எல்லாம் தடுத்து மழுங்கடித்தவர் கலைஞர். இந்த வரலாற்று துரோகத்தை அடுத்த சந்ததிக்கு கடத்துவோம்.

No comments:

Post a Comment