Friday, October 20, 2023

தோழர் இளங்கோ

•தோழர் இளங்கோ முதலாம் ஆண்டு நினைவு தினம் (17.10.2023) தமிழ்த்தேசிய விடுதலையை முன்னெடுத்த தோழர் இளங்கோ கடந்த ஆண்டு காலமானார். நாளை அவரது முதலாவது நினைவு தினம் ஆகும். கரூரில் பிறந்த தோழர் இளங்கோ புலவர் கலியபெருமாள் மூலம் தமிழ்நாடு விடுதலைப்படையில் சேர்ந்து பங்காற்றினார். 11.04.88 யன்று ஈழத்தில் இந்திய ராணுவம் புரிந்த அக்கிரமங்களை கண்டித்து கொடைக்கானல் டிவி டவருக்கு குண்டு வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததால் குண்டை கொண்டு சென்ற தோழர் மாறன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். கூடவே சென்ற தோழர் இளங்கோ படுகாயம் அடைந்தார். அங்கிருந்து தப்பி வரும்போது ஒரு இடத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அதிர்ஸ்டவசமாக இவர் ஒரு மருத்துவரின் வீட்டின் முன் மயங்கி விழுந்ததால் அப் பெண் மருத்துவர் உடனடியாக இவருக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் இவ் வழக்கில் இவருக்கு ஆயள் தண்டனை வழங்கப்பட்டது. நீண்ட சிறைவாசத்தின் பின் விடுதலையானார். தமிழத்தேசிய விடுதலைக்கான இவரது அர்ப்பணிப்பு மகத்தானது. இவரை என்றும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

No comments:

Post a Comment