Friday, October 20, 2023

தோழர் இளங்கோ முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்

•தோழர் இளங்கோ முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிகள் 1988ம் ஆண்டு விமானம் மூலம் நாடு திரும்புவதற்காக தோழர் பொழிலன் ஏற்பாட்டில் திருச்சியில் தோழர் மாறனுடன் சில நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது நான் நாடு திரும்பும் செய்தியை புலவரிடம் கூறுவதற்காக பெண்ணாடத்தில் உள்ள அவர் வீட்டிற்கு தோழர் மாறனுடன் சென்றிருந்தேன். அங்கு புலவர் அவர்களால் எனக்கு தோழர் இளங்கோ அறிமுகம் செய்யப்பட்டார். புலவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தோழர்கள் மாறன், இளங்கோ இருவருக்கும் பெண்ணாடம் ஆற்றங்கரையில் பயிற்சிகள் வழங்கினேன். அப்போது மாலை இருட்டு நேரம். வேலை முடிந்து வந்த கூலி விவசாயிகள் குண்டு சத்தம் கேட்டு பயந்துவிட்டனர். இதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை. ஆனால் புலவரால் எமக்கு காவலுக்கு நியமிக்கப்பட்ட தோழர் லெனின் உடனே சமயோசிதமாக செயற்பட்டு பாறைக்கு வெடி வைக்கிறார்கள் என அவர்களிடம் கூறி சமாளித்தார். பின்னாளில் இதே தோழர் லெனின்தான் தமிழ்நாடு விடுதலைப்படையின் தளபதியாக பொறுப்பேற்று பல காவல்நிலையங்களை குண்டு வீசித் தகர்த்தார்.

No comments:

Post a Comment