Sunday, October 29, 2023

கரடியே காரித் துப்பிடிச்சு!

• கரடியே காரித் துப்பிடிச்சு! கண் தெரியவில்லை. காது கேட்கவில்லை. மற்றவர் துணையின்றி நடக்க முடியவில்லை. எனவே சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும் என நான் எழுதினேன். அப்போது சுமந்திரன் தம்பிகள் பலர் வந்து என்னை திட்டினார்கள். அது மட்டுமல்ல சம்பந்தர் ஐயா நன்கு ஆரோக்கியமாக செயற்படுவதாகவும் கூறினார்கள். இப்போது அவர்களுடைய சுமந்திரனே வந்து வயது மூப்பு காரணமாக சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும் என பகிரங்கமாக கோரியுள்ளார். எனக்கு பல விபரங்கள் தெரிந்திருந்தும் சம்பந்தர் ஐயாவை அவமதிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதாமல் தவிர்த்தேன். ஆனால் சுமந்திரன் 288 நாளில் வெறும் 39 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு சம்பந்தர் ஐயா வந்துள்ளார் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல அவருக்கு சம்பளமாக 40 லட்சம் ரூபாவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்திற்காக 4 லட்சத்து 19ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். எல்லாவற்றையும்விட சுமந்திரன் தன் தலைவர் சம்பந்தர் ஐயா பற்றிய இவ் விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கூடாக பெற்றுள்ளார். சுமந்திரனுக்கு சம்பந்தர் ஐயா மீது ஏன் இந்த கோபம் என்று தெரியவில்லை. ஏன் பகிரங்கமாக இதை எல்லாம் கூறி சம்பந்தர் ஐயாவை அவமதிக்கிறார் என்றும் புரியவில்லை. எனவே இனியும் சம்பந்தர் ஐயா பதவியில் இருப்பது முறையில்லை. அவர் பதவி விலகி இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment