Friday, October 20, 2023

மறக்க முடியாத தட்டிவான் பயணம்

•மறக்க முடியாத தட்டிவான் பயணம்! படிக்கிற காலத்தில் தினமும் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிவரை இந்த தட்டிவானில் டிக்கியில் நின்று பயணம் செய்தது இன்றும் நினைவில் இருக்கிறது. நாம் இப்படி டிக்கியில் நின்று வரும்போது எமக்கு அடிப்பதற்காக பொலிஸ் சார்ஜன்ட் மாணிக்கராசா சங்குன்னி கடையில் நீண்ட தடியுடன் ஒளித்து நிற்பார். சார்ஜண்ட் மாணிக்கராசா ஒளித்து நிற்பதை வீதியில் நிற்பவர்கள் இரகசியமாக சிக்னல் தருவார்கள். உடனே தட்டிவான் டிறைவர் எம்மை தலையை உள்ளே செருகும்படி கூறுவார். எமது உடல் முழுவதும் டிக்கியில் நிற்கும். தலையை மட்டும் குனிந்து தட்டி வானுக்குள் செருகி நிற்போம். இப்படி நின்றால் மாணிக்கராசா அடிக்க மாட்டார். அது ஏன் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை.

No comments:

Post a Comment