Monday, August 14, 2017

தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக புலிகளை கொல்லுமாறு அறிக்கைவிடும் விஜயகலா!

•தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக
புலிகளை கொல்லுமாறு அறிக்கைவிடும் விஜயகலா!
“புலிகளை தாராளமாக கொல்லுங்கள். நாங்கள் கேட்க மாட்டோம்” என அறிக்கை விட்டுள்ளார் அமைச்சர் விஜயகலா.
சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். அப்படியிருக்க அமைச்சர் விஜயகலா குடுமி சும்மா ஆடுமா?
மாணவி வித்யா கொலை வழக்கில் எதிரி சுவிஸ் குமார் தப்பி செல்ல அமைச்சர் விஜயகலா உதவியிருக்கிறார்.
கைது செய்யப்பட்டிருக்கும் பிரதி பொலிஸ்மா அதிபர் “அமைச்சர் விஜயகலா கேட்டுக் கொண்டதாலேயே நான் சுவிஸ்குமார் தப்ப உதவினேன்” என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி; வழக்கறிஞர்கள் அமைச்சர் விஜயகலா சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவரை விசாரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
அமைச்சர் விஜயகலா சுவிஸ்குமார் தப்பி செல்ல உதவினார் என்றும் அவர்மீது நடவடிக்கை வேண்டும் என்றும் சிங்கள ஊடகங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
நீதிமன்றமும் அமைச்சர் விஜயகலாவை விசாரித்து வாக்குமூலம் பெறுமாறு குற்றப்புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால் தன்னையும் தனது பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக புலிகளை தாராளமாக கொல்லுங்கள் என்று விஜயகலா அறிக்கை விட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில் புலிகளை மாவீரர்கள் என்று புகழ்வதும் அப்புறம் தனது பதவியைக் காப்பாற்ற புலிகளை கொல்லுங்கள் என அறிக்கை விடுவதும் இவருக்கு வெட்கம் இல்லை.
ஏனெனில் இவர் தனது பதவி நலனுக்காக எந்த மட்டத்திற்கும் இறங்குவதற்கும் தயாராகவே உள்ளார்.
ஆனால் இனி தமிழ் மக்கள் இவரது பசப்பு வார்த்தைகளை நம்பப்போவதில்லை.

No comments:

Post a Comment