Thursday, August 31, 2017

•புத்தர் தற்கொலை செய்யட்டும்!

•புத்தர் தற்கொலை செய்யட்டும்!
புத்தரின் பேரால் இலங்கையில் தமிழ் குழந்தைகள் எப்படி கொலை செய்யப்பட்டார்களோ,
அவ்வாறே புத்தரின் பெயரால் பர்மாவில் முஸ்லிம் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர்.
இலங்கையில் தமிழ் குழந்தைகள் கொல்லப்படும்போது எப்படி உலகம் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்ததோ,
அவ்வாறே பர்மாவில் குழந்தைகள் கொல்லப்படும்போதும் உலகம் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது
இந்தக் குழந்தை முஸ்லிம் குழந்தை என்பதற்காக ஆற்றில் வீசிக் கொல்லப்பட்டுள்ளது.
சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஆன்சுகி அம்மையார் ஆட்சியிலேதான் இந்தக் கொலைகள் நடைபெறுகின்றன.
இனி இதைப பார்த்துவிட்டு தனக்கு ஏன் நோபல் பரிசு தரவில்லை என்று மகிந்த ராஜபக்ச கேட்கப் போகிறார்.
அன்பை போதித்த புத்தரின் பெயரால் இலங்கையில் கொலை நடந்தபோது புத்தர் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார் என்றார்கள்.
இப்போது பர்மாவில் நடக்கும் கொலைகளை பார்த்தால் புத்தர் தற்கொலை செய்யப் போகிறார்என்றே சொல்லத் தோன்றும்.
மனிதத்தை தின்ற மதம்!

No comments:

Post a Comment