Thursday, August 31, 2017

•ஆமா, ஆபிரகாம் சுமந்திரன் என்று ஒருத்தர்

•ஆமா, ஆபிரகாம் சுமந்திரன் என்று ஒருத்தர் அங்கிட்டும் இங்கிட்டுமாய் ஓடிக்;கிட்டு திரிந்தாரே.
யாராவது பார்த்தீங்களா?
அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடந்த அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு பங்காளிக் கட்சிகளை அழைத்துச் செல்லாமல் சம்பந்தர் அய்யாவை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார் சுமந்திரன்.
அது சரி. தமிழ் மக்கிள் பிரச்சனைகளை பேசுவதாக இருந்தால் பங்காளி கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்றிருப்பார். சும்மா இருந்து மிக்சரும் ரீ யும் சாப்பிடுவதற்கு அவர்கள் எதற்கு என்று நினைத்து விட்டார் போலும்.
ஆனால், மகிந்தவை விரட்டி நல்லாட்சி அரசை கொண்டு வந்தது தாங்கள்தான் என்று பேசிவரும் சுமந்திரன் “நாங்கள் இணைந்து ஆட்சி செய்வோம் வாருங்கள்” என்று மகிந்தாவுக்கு சம்பந்தர் அய்யா அழைப்பு விடுத்தது குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரன் பதவி விலக மறுத்து வருவது தொடர்பாக தமிழ்தேசியகூட்டமைப்பு பேச்சாளரான சுமந்திரன் ஏன் மௌனம் சாதிக்கிறார்?
தமிழரசுக்கட்சி அமைச்சர்கள் பதவி விலகிய போதும் டெனீஸ்வரன் பதவி விலக மறுக்கிறார்.
தனது டெலோ அமைப்பு கேட்டுக்கொண்டபோதும் அமைச்சர் டெனீஸ்வரன் பதவி விலக மறுக்கிறார்.
தற்போது டெலோ அமைப்பு அவரை கட்சியை விட்டு நீக்கியபோதும் அவர் பதவி விலக மறுக்கிறார்.
முதலமைச்சர் பதவி நீக்கியபோதும் அவர் ஒத்துழைக்க மறுக்கிறார். அதுமட்டுமல்ல சவால் விட்டுக்கொண்டு திரிகிறார்.
அமைச்சர் டெனீஸ்வரன் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
அனால் இத்தனைக்கு பிறகும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எந்த கருத்தும் கூறாமல் மௌனமாக இருக்கிறார்.
இங்கு வேடிக்கை என்னவெனில் அமைச்சர் ரவி கருணாயக்கா பதவி விலகியபோது பாராட்டிய சம்பந்தரும் சுமந்திரனும் டெனீஸ்வரன் விடயத்தில் மௌனம் காக்கின்றனர்.

No comments:

Post a Comment