Monday, August 14, 2017

•அன்புள்ள அப்பாவுக்கு!

•அன்புள்ள அப்பாவுக்கு!
நீங்கள் தீவிரவாதி என்கிறார்களே
அது உண்மையா அப்பா?
அன்புள்ள அப்பாவுக்கு
உங்கள் அன்பு மகள் எழுதுவது
80 நாட்கள் ஆகிவிட்டது
இன்னும் ஏன் வரவில்லை அப்பா?
எப்பதான் வருவீர்கள் அப்பா?
கட்டிப்பிடித்து தூங்க நீங்கள் அருகில் இல்லை
கதை சொல்லி உணவு ஊட்டவும் நீங்கள் இல்லை
உப்பு மூட்டை தூக்கி விளையாடவும் நீங்கள் இல்லை
பள்ளிக்கு கூட்டிச் செல்லவும்கூட நீங்கள் இல்லை.
ஜ மிஸ் யு ( I miss you )அப்பா !
நீங்கள் அருகில் இல்லை என்பது கூட
என்னால் தாங்க முடியும் அப்பா- ஆனால்
நீங்கள் தீவிரவாதி என்று எச்ச ராஜா கூறுகிறாரே
அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை அப்பா!
உ.பி யில் 70 குழந்தைகள் சாவு.
யாருமே கைது செய்யப்பட வில்லை
கும்பகோணத்தில் 94 குழந்தைகள் சாவு
கைது செய்யப்பட்டவர்கள் யாவரும் விடுதலை.
ஆனால் உங்களை மட்டும் ஏன் இன்னும்
நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை அப்பா?
இந்தியாவில்
ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு
அஞ்சலி செலுத்துவது தீவிரவாதமா அப்பா?
குறிப்பு- பயங்கரவாதிகள் ஆட்சி செய்யும் நாட்டில் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் தீவிரவாதிகளே. ஒவ்வொரு தமிழனும் தீவிரவாதியாக மாறுவோம்!

No comments:

Post a Comment