Thursday, August 31, 2017

•எச்சரிக்கிறேன் போராட்டம் வெடிக்கும்!

•எச்சரிக்கிறேன்
போராட்டம் வெடிக்கும்!
கனடா வாழ் தமிழ் மக்கள் பணம் தராவிட்டால் கனடாவில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன் - வெடிகுண்டு முருகேசன் அறிக்கை.
இலங்கையில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழ வேண்டும். அதற்கேற்றவாறு சட்டம் இயற்ற வேண்டும் என்று கனடா பிரதமர் தெரிவித்தள்ளார்.
ஆனால் தெருவிழாவில் பங்குபற்றிய தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தமது கட்சிக்கு நிதி தரும்படி கோரியுள்ளார்.
இதோ மாவையாரின் புலம்பல்!
கனடாக்காரன்கள்,
அள்ளி தருவான்கள் என நினைத்தேன்
கிள்ளிக்கூட தருகிறான்கள் இல்லை
கிள்ளி தராவிட்டாலும் பரவாயில்லை
வசந்தமாளிகை கட்டி முடிக்கவா என்று
கிண்டலாக அல்லவோ கேட்கிறான்
இப்படி கூப்பிட்டு வைத்து
அசிங்கப்டுத்துவான்கள் என்று தெரிந்திருந்தால்
வராமலே இருந்திருப்பனே
எல்லாம் சரி
அதென்ன கணக்கு கேட்கிற புதுப்பழக்கம்?
கணக்கு விடுவதுதானே எங்கள் வழக்கம்
எச்சரிக்கிறேன்
கணக்கு கேட்டால்
கனடாவில் போராட்டம் வெடிக்கும்.

No comments:

Post a Comment