Thursday, August 31, 2017

•இது ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க

•இது ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க
போடப்பட்ட போட்டோக்கள் அல்ல!
இதில் ஒருவர் தமிழ் இளைஞர். பௌத்த பேரினவாதத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்.
மற்ற இளைஞர் மியான்மர் முஸ்லிம் இளைஞர். இவரும் பௌத்த மதத்தின் பேரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டது எப்படி உலகம் மறந்து விட்டதோ அதே மாதிரி மியான்மர் முஸ்லிம்கள் கொலையும் மறக்கப்படும்.
கொல்லப்பட்ட முஸ்லிம்கள் பயங்கரவாதிகள். அவர்களை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறுவதற்கு அந்த முஸ்லிம்களில் ஒரு சம்பந்தர் அய்யா இனி கண்டு பிடிக்கப்படுவார்.
அடுத்து, “நடந்தது இனப் படுகொலை அல்ல. அது வெறும் போர்க் குற்றமே. அதையும் சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை” என ஒரு சுமந்திரன் அவர்களுள் கூறுவார்.
அப்புறம் என்ன, பர்மா பிரதமர் ஆன்சுகி அம்மையாருக்கு மீண்டும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று ஜ.நா வில் பிரோரணை தயாரிக்கப்படும்.
போங்கடா, டீ ஆறப் போகுது. போய் முதல்ல அதைக் குடியுங்க!

No comments:

Post a Comment