Monday, August 14, 2017

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம்

•நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம். ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது- பாப்லோ நெரூடா
ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்தை கர்நாடக அரசு அழிக்கிறது.
வங்கி ஊழியர்கள் அனைவரும் 6 மாதத்தில் கன்னடம் படிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கூறுகிறது.
இதற்கெல்லாம் மௌனமாக இருக்கும் மோடி அரசு தமிழ்நாடு பாராளமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் போது மட்டும் ஆட்சேபம் தெரிவிக்கிறது.
ஆட்;சேபம் தெரிவித்தாலும் பரவாயில்லை "அரக்கர் " என்று கேவலமாக திட்டுகிறார்கள்.
இத்தனைக்கும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் தம்பித்துரையும் அவரது கட்சியும் ஜனாதிபதி தேர்தலில் மோடியின் கட்சிக்கே ஆதரவு தெரிவித்தவர்கள்.
தமக்கு ஆதரவானவரையே அரக்கன் என்று திட்டுகின்றார்கள் எனில் தமிழ் மக்களை இவர்கள் இந்தியனாக மட்டுமன்றி மனிதனாக கூட கருதவில்லை என்றுதானே அர்த்தம்.
வருடம் 85 ஆயிரம் கோடி ரூபாவை தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெறும் மோடி அரசு பாராளுமன்றத்தில் தமிழில் பேசுவதை ஆட்சேபிக்கிறது.
தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் தமிழனுக்கும் தமிழ் மொழிக்கும் இந்த அவலம் வருமா?

No comments:

Post a Comment