Thursday, August 31, 2017

இவர் யார்?

இவர் யார்?
30 வருடங்களுக்கு முன்பு இவர் ஏன் கொல்லப்பட்டார்?
இவர் தவறு செய்திருந்தால் கைது செய்து நீதிமன்றத்தில் அல்லவா நிறுத்தியிருக்க வேண்டும்?
இவருக்குரிய தண்டனையை நீதிமன்றம் அல்லவா வழங்கியிருக்க வேண்டும்?
அதைவிடுத்து இவர் ஏன் தமிழக காவல்துறையால் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்?
கோடிக் கணக்கான ரூபாய்களை ஊழல் செய்த அரசியல்வாதிகள் எல்லாம் சுதந்திரமாக நடமாடும்போது இவர் மட்டும் ஏன் சட்டவிரோதமாக கொல்லப்பட்டார்?
ஆம். இவர்தான் தோழர் தமிழரசன்.
அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று ஆயுதம் ஏந்திப் போராடியதால் கொல்லப்பட்டவர்.
தமிழ்நாடு விடுதலை அடைவதே ஈழ விடுதலைக்கு செய்யும் உதவி என்று கூறியதால் கொல்லப்பட்டவர்.
தோழர் தமிழரசன் பற்றி அறிவதற்கு, செப்டம்பர் முதலாம் திகதி அவரது 30 வது நினைவு நாளில் வெளிவருகிறது , நான் எழுதிய “ ஓரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”

No comments:

Post a Comment