Thursday, August 31, 2017

இந்தியாவின் 71வது சுதந்திர தினம்!

•இந்தியாவின் 71வது சுதந்திர தினம்!
இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்கு?
எதிர்வரும் 2018 ஜனவரி மாதம் சாதாரண மாதமாக இருக்காது என்று பிரதமர் மோடி தனது சுதந்திரதின உரையில் கூறியுள்ளார்.
இவர் அடிக்கடி புதிய இந்தியா பிறக்குது என்பதால் அடுத்த ஜனவரி மாதமும் புதிய இந்தியாவைப் பெறப் போகிறாரோ என்ற பயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் கடைசியாக ரூபா நோட்டு செல்லாது என்று மோடி புதிய இந்தியாவைப் பெத்த போது மக்கள் பட்ட வலி இன்னும் மறக்கவில்லை.
இந்த ரூபா நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் என்றார் பிரதமர் மோடி .
ஆனால் இதன் பின்னர் முதலாளிகளின் சொத்து பெறுமதியே அதிகரித்துள்ளது. இதோ சிலரின் சொத்து விபரம்,
முகேஸ் அம்பானி – 4.5 லட்சம் கோடி ரூபா
பிர்லா குழுமம்- 3 லட்சம் கோடி ரூபா
அனில் அம்பானி – 2.5 லட்சம் கோடி ரூபா
டாடா குழுமம் - 1.45 லட்சம் கோடி ரூபா
பஜாஜ் குழுமம் - 1.7 லட்சம் கோடி ரூபா
அதானி குழுமம் - 1.1 லட்சம் கோடி ரூபா
மோடி அரசு பெரு முதலாளிகளின் அரசாகவே இருக்கிறது. அவர்களின் நலனுக்காகவே மோடி ஆட்சி செய்கிறார்.
இந்தியாவின் பெரிய காப்ரேட் கம்பனிகளின் மொத்த வராக் கடன் தொனை 5 லட்சம் கோடி ரூபா.
ரிலைன்ஸ் ( முகேஸ் அம்பானி) – 1,87,070 கோடி ரூபா
ரிலைன்ஸ் (அனில் அம்பானி ) - 1, 21,000 கோடி ரூபா
எஸ்ஸார் குரூப் - 1,01,461 கோடி ரூபா
அதானி குரூப் - 96,000 கோடி ரூபா
ஜேபி குரூப் - 75,000 கோடி ரூபா
ஜிஎம்ஆர் குரூப் - 47,976 கோடி ரூபா
லான்கோ குரூப் - 47,102 கோடி ரூபா
வீடியோகான் - 45,400 கோடி ரூபா
மோடியைப் பொறுத்தவரையில் நாலு முதலாளிகள் நல்லாய் இருப்பதற்காக நாடு நாசமாய் போனாலும் பரவாயில்லை என்பதே அவரது கொள்கை.
இந்தியாவில் பெரிய காப்பரேட ;கம்பனி முதலாளிகள் சுரண்டவும் கொள்ளையடிக்கவும் சுதந்திரம் உண்டு.
71 ஆண்டாகியும் இந்திய மக்களுக்கு இன்னும் சுதந்திரம் வரவில்லை என்பதே உண்மை.

No comments:

Post a Comment