Monday, August 14, 2017

•இவர்கள் நமக்கு என்ன சொல்ல வருகிறார்கள்?

•இவர்கள் நமக்கு என்ன சொல்ல வருகிறார்கள்?
இந்த வெள்ளைக்காரர்கள் நமக்கு எதோ சொல்ல வருகிறார்கள். ஆனால் அது என்னவென்று எனக்கு புரியவில்லை.
இயேசு பிரானைவிட நல்லுர் முருகன் சக்தி மிக்கவர் என்று சொல்ல வருகிறார்களா?
அல்லது,
நல்லூர் முருகனை வணங்குவதற்கு இடுப்பில் சேலை கட்ட வேண்டும் என்று சொல்ல வருகிறார்களா?
ஆனால் எனக்கு இதைப் பார்க்க ஒரு ஆப்பிரிக்க கவிஞனின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது
"அவர்கள் வரும்போது
அவர்கள் கையில் பைபிள் இருந்தது
எங்கள் கையில் நாடு இருந்தது
ஆனால் சில நாட்கள் கழித்து
எங்கள் கையில் அவர்களின் பைபிள் இருந்தது
அவர்கள் கையில் எங்கள் நாடு இருந்தது! "
உங்களுக்கு ஏதாவது புரிகிறதா நண்பர்களே?
குறிப்பு- இந்த வெள்ளைக்காரர்கள் நாடு பிடிக்க வந்தவர்கள் என்று நான் குறிப்பிடவில்லை.

No comments:

Post a Comment