Thursday, August 31, 2017

தமிழன் என்று சொல்லடா தலையில் பூவை வையுடா !!

தமிழன் என்று சொல்லடா
தலையில் பூவை வையுடா !!
தமிழன் என்று ஓர் இனம் உண்டு
அவனுக்கென்று தனி குணம் உண்டு
பாரிஸ் றோட்டை மறித்து தேர் இழுத்தவன்
அதில் மூட்டை மூட்டையாக தேங்காய் உடைத்தவன்
அது போதாதென்று,
பிரஞ்சு பெம்பிளை பொலிஸ் குடும்பியில்
பூ வைத்து மகிழ்பவன்- இதனால்
கலாச்சாரத்தை காப்பாற்றி விட்டதாக பூரிப்பவன்
இனி அடுத்து
பிரெஞ்சு பெம்பிளைகளின் கூந்தலுக்கு
இயற்கையாக மணம் உண்டா என்று
திண்டுக்கல் லியோனியை அழைத்து
பட்டிமன்றம் நடத்துவான்.
பலே பாரிஸ் தமிழா
வேட்டியை மடிச்சு கட்டு
அப்படியே மீசையையும் முறுக்கு!

No comments:

Post a Comment