Thursday, August 31, 2017

•தனது ராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தும் இந்திய ராணுவ தளபதி

•தனது ராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தும் இந்திய ராணுவ தளபதி
தன் ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவாரா?
யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் நினைவிடத்தில் இந்திய ராணவ தளபதி நேற்றைய தினம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொல்லப்பட்ட தமது ராணுவ வீரர்களுக்கு 30 வருடங்களின் பின் இந்திய ராணுவ தளபதி யாழ்ப்பாணம் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதேவேளை இந்திய ராணுவத்தால் கொல்லப்ட்ட தமிழ் மக்களுக்கு இன்னும் நியாயம் வழங்கப்படவில்லை.
1987ம் ஆண்டு அமைதிப்படை என்னும் பெயரில் வந்த இந்திய ராணுவம் 8000ற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை கொன்றது.
இந்திய ராணவம் 600க்கும் மேற்பட்ட தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது.
79 வயது மூதாட்டியைக்கூட இந்திய ராணுவம் பாலியல் வல்லுறவு செய்தது என அப்போதைய பிரதமர் பிரேமதாசா பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பல கோடி ரூபா பெறுதியான தமிழ் மக்களின் சொத்துக்கள் இந்திய ராணுவத்தால் சேதமாக்கப்ட்டன.
இவை குறித்து இதுவரை எந்தவிதமான விசாரணையும் செய்யப்டவில்லை. 30 வருடமாகியும் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை.
மிகப் பெரிய துயரம் என்னவெனில், தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குமாறு தமிழ் தலைவர்கள் எவரும் இதவரை இந்தியாவிடம் கோரவில்லை.
ஆனாலும் ஆறுதல் தரும் வண்ணம் தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையானது இந்திய ராணுவ தளபதியின் விஜயம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது.
தலைவர்கள் சோரம் போனாலும், தலைவர்கள் துரோகம் புரிந்தாலும் தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை காட்டுவார்கள்.

No comments:

Post a Comment