Thursday, August 31, 2017

ஈழத்தில் தமிழர் அகதிகளாக கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டதுபோல்

ஈழத்தில் தமிழர் அகதிகளாக கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டதுபோல் பர்மா முஸ்லிம் அகதிகளும் கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஈழத்தில் தமிழ் அகதிகளை பார்வையிட வந்ததுபோல் பர்மா முஸ்லிம் அகதிகளை பார்வையிடவும் ஜ.நா செயலர் இனி வருவார்.
ஜ.நா செயலருக்கு கம்பி வேலிக்கு பின்னால் இருந்து ஈழத் தமிழர் எப்படி நம்பிக்கையுடன் கை அசைத்தனரோ அதே மாதிரி கம்பி வேலிக்கு பின்னால் இருக்கும் முஸ்லிம் அகதிகளும் நம்பிக்கையுடன் கை அசைப்பார்கள்.
ஜ.நா செயலரும் ஈழத் தமிழருக்கு குடி தண்ணி போத்தல் வழங்குமாறு எப்படி உத்தரவிட்டாரோ அதேமாதிரி பர்மா முஸ்லிம் அகதிகளுக்கும் தண்ணி போத்தல் வழங்குமாறு உத்தரவிடுவார்.
ஜ.நா மன்றத்தினால் மகிந்த ராஜபக்ச தண்டிக்கப்படுவார் என்று எப்படி ஈழத் தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களோ அதே மாதிரி ஆன்சுகி அம்மையார் தண்டிக்கப்படுவார் என பர்மா முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருப்பார்கள்.
ஜ.நா செயலரோ அடுத்து என்ன அறிக்கை தான்விட வேண்டும் என்பதை அமெரிக்க ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டிருப்பார்.

No comments:

Post a Comment