Thursday, August 31, 2017

•தந்தை பெரியாரின் தடி கொண்டு

•தந்தை பெரியாரின் தடி கொண்டு
சுவாமி நித்தியானந்தாவை வரவேற்போம்!
நடிகை ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா சுவாமி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவு பிரபல்யம்.
நாட்டில 70 குழந்தை செத்தால் என்ன. சுனாமியே வந்தால் என்ன. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அழகான பெண்களுடன் செல்பி எடுத்து வெளியிட்டுக் கொண்டிருப்பவர் இந்த சுவாமி.
நீண்ட நாட்களாக சுவாமிகளின் சிடி , டிவிடி எதுவும் காணவில்லையே என்று பார்த்தால் சுவாமிகள் விரைவில் ஈழத்திற்கு விஜயம் செய்யப் போகிறாராம் என்ற செய்தி வருகிறது.
நடிகை சொர்ணமால்யா புகழ் காஞ்சி சங்கராச்சாரி சுவாமிகளையே வருமாறு முதலில் அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
ஆனால் கடல் கடக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு காரணமாக காஞ்சி சங்கராச்சாரி வரமுடியாததால் தற்போது நித்தியானந்தசுவாமி வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாம்.
வழக்கம்போல் இதற்கான சகல ஏற்பாடுகளையும் யாழ் இந்திய தூதரே மேற்கொண்டு வருகிறாராம்.
சுவாமிகளுடன் அவருடைய சீடர் ரஞ்சிதா மேடமும் வருவார் என பக்தர்களுக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாம்.
போகிறபோக்கைப் பார்த்தால் சன் டிவிக்கு மீண்டும் ஒரு நல்ல சிடி கிடைக்கும் போல் இருக்கிறது.
ஆனால், தந்தை பெரியாரின் கைத்தடி எம்மிடம் உண்டு. அது கொண்டு சுவாமி நித்தியானந்தாவை எதிர்கொள்ளும் தைரியம் எமக்குண்டு.
“உன் சாத்திரத்தை விட
உன் முன்னோரை விட
உன் வெங்காயம் வெளக்கமாத்த விட
உன் அறிவு பெரிது. அதை சிந்தி”
-தந்தை பெரியார்.

No comments:

Post a Comment