Thursday, August 31, 2017

•இந்த இளைஞனின் பெற்றோர் என்ன கூறுவார்கள்?

•இந்த இளைஞனின் பெற்றோர் என்ன கூறுவார்கள்?
திருமுருகன் காந்தி ஒரு தமிழ் இளைஞர். ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக அஞ்சலி செலுத்த முயன்றமைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
90 நாட்களுக்கு மேலாக தனது குடும்பத்தவர்களை பிரிந்து தனது வேலையை இழந்து சிறையில் வாடுகிறார்.
இருப்பினும் அவரது தந்தை தன் மகன் திருமுருகன் காந்தியை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.
வளர்மதி ஒரு தமிழ் மாணவி. நெடுவாசல் கிராம மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது தாய் தன் மகள் வளர்மதி பயங்கரவாதி இல்லை என்றும் அவரது மக்களுக்கான போராட்டத்தை தான் ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதோ இவரும் ஒரு தமிழ் இளைஞர்தான். வளர்மதி குரல் கொடுத்த நெடுவாசல் கிராமம் இருக்கும் கும்பகோணம் மாவட்டத்தில் இருக்கிறார்.
இவர் நடிகர் அஜீத்திற்காக தனது நாக்கில் கற்பூம் கொளுத்தி அவர் போஸ்டர் முன் ஆராதனை செய்கிறார்.
இவரது இந்த செயல் குறித்து பெற்றோர்கள் என்ன சொல்வார்கள்? அவர்களால் தமது மகன் செயல் குறித்து பெருமைப்பட முடியுமா?

No comments:

Post a Comment