Monday, August 14, 2017

•தமிழ் மக்கள் “வெங்காயங்கள்” என்று தந்தை பெரியார் கூறியது சரிதானா?

•தமிழ் மக்கள் “வெங்காயங்கள்” என்று
தந்தை பெரியார் கூறியது சரிதானா?
நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க கோரி கடந்த 9வது நாளாக உண்ணாவிரத போராட்டம் மதுரையில் நடக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழர்களின் வழக்கை தமிழில் நடத்தும்படி கேட்பது நியாயமான, அவசியமான கோரிக்கைதான்.
தமிழ் மக்களுக்கான இந்த கோரிக்கை குறித்து எத்தனை தமிழர்கள் ஆர்வம் காட்டுகின்றார்கள்?
இந்த கோரிக்கைக்காக 9வது நாளாக உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு எத்தனை தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கின்றார்கள்?
நடிகை ஓவியா. இவர் ஒரு மலையாள நடிகை. இவர் பணத்திற்காக பிக்பாஸ் நிகழ்வில் நடிக்கிறார்.
ஆனால் ஒன்றரைக் கோடி தமிழர்கள் இவருக்காக வாக்களித்துள்ளார்கள். இவருக்காக “ஓவியா ஆர்மி” “சேவ் ஓவியா” அமைப்புகளையும் ஆரம்பித்துள்ளார்கள்.
ஓவியா என்ன சாகக் கிடக்கிறாரா? அவரை எதற்கு காப்பாற்ற வேண்டும்? என்ன எழவுக்கு “சேவ் ஓவியா” அமைப்பு?
கதிரமங்கலம் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தவர் மாணவி வளர்மதி. அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளது தமிழக அரசு.
மலையாள நடிகை ஓவியாவுக்காக குரல் கொடுத்த தமிழர்கள் ஏன் இந்த மாணவிக்காக குரல் கொடுக்கவில்லை?
கொல்லப்பட்ட ஈழத் தமிழருக்காக அஞ்சலி செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருப்பவர் திருமுருகன் காந்தி.
லண்டனிலும் கனடாவிலும் “ஓவியா ஆர்மி” ஆரம்பித்துள்ள ஈழத் தமிழர்கள் தமக்காக குரல் கொடுத்த திருமுருகன் காந்திக்காக ஏன் ஒரு அமைப்பை ஆரம்பிக்கவில்லை?
தனக்காக போராடியவர்களை கண்டு கொள்ளாது மலையாள நடிகைக்கு ஆதரவாக கொடுக்கும் ஒரே இனம் உலகில் தமிழ் இனம் மட்டும்தான்.
இப்போது கூறுங்கள். தந்தை பெரியார் தமிழர்களை பார்த்து வெங்காயம் என்று ஏசியது சரிதானே!

No comments:

Post a Comment