Tuesday, July 30, 2019

•ஐயா! பிளீஸ் செத்துவிடுங்கள் !!

•ஐயா!
பிளீஸ் செத்துவிடுங்கள் !!
செய்தி - மீண்டும் ரணில் அரசைக் காப்பாற்றிய சம்பந்தர் ஐயா.
ரணில் அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் அரசைக் காப்பாற்றியுள்ளார் சம்பந்தர் ஐயா.
இதுவரை சம்பந்தர் ஐயாவுக்கு மட்டுமே 32 சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இன்று முதல் அவரது திருமலை வீட்டுக்கும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முஸ்லிம் எம்.பி மார்கள் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கி மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் எவ்வித நிபந்தனையும் இன்றி தமது ஆதரவை அரசுக்கு வழங்கியதன் மூலம் அரிய வாய்ப்பை தவற விட்டுள்ளார் சம்பந்தர் ஐயா.
ஒருபுறம் அவரது தொகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலை இடிக்க தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கிய அதேவேளை மறுபுறம் அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளார் சம்பந்தர் ஐயா.
அவருக்கு வாக்களித்த மக்கள் வீடு தேடிச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தும் அதைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல் அரசுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார் சம்பந்தர் ஐயா.
ரணில் அரசைக் கவிழ்த்தால் அதைவிட மோசமான மகிந்த அரசு ஆட்சிக்கு வந்து வீடும் என்று சம்பந்தர் ஐயா கூறுகிறார்.
மகிந்த அரசு வந்தால் அது முஸ்லிம்களுக்கு எதிரானதுதானே? ஆனால் முஸ்லிம் பிரதிநிதிகளால் தங்களுக்கு வேண்டியதை ரணில் அரசிடம் கேட்டுப் பெற முடிகிறதே. அதேபோல் ஏன் சம்பந்தர் ஐயாவினால் கேட்டுப் பெற முடியாது?
எதையும் கேட்டுப் பெற முடியாது என்றால் எதற்காக எப்போதும் ரணில் அரசை ஆதரித்துக் கொண்டிருக்க வேண்டும்?
சம்பந்தர் ஐயா அவர்களே!
கல்முனைப் பிரச்சனையில் கூட தமிழ் மக்களுக்குரிய தீர்வை உங்களால் பெற முடியவில்லை என்றால் இனப் பிரச்சனைக்கான தீர்வை எப்படி பெறப் போகிறீர்கள்?
ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. நீங்கள் இருக்கும்வரை தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.
எனவே பிளீஸ் ஐயா! செத்துவிடுங்கள். அதுதான் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment