Tuesday, July 30, 2019

இந்த படத்தை போட்டு விட்டு

இந்த படத்தை போட்டு விட்டு
பாருங்கள் எம் தலைவர் சிறிதரன்
மக்களை சந்திக்க சகதியில் நடந்து வருகிறார் என்று
பெருமையாக இரண்டு வரி எழுதலாம் என நினைத்தேன்
தலைவர் தனது சொகுசு வாகன பர்மிட்டை 5 கோடி ரூபாவுக்கு விற்று
யாழ் நகரில் புதிதாக சொகுசு பங்களா கட்டியிருக்கிறாராம் என்று
சொல்லி விட்டு நண்பன் ஒருவன் கொடுப்பிற்குள் சிரிக்கிறான்.
தானே அடுத்த தேசிய தலைவர் என்று சொல்பவர்
அப்படி செய்ய மாட்டாரே என்று நானும் பதில் கொடுத்தேன்
நண்பனோ தலைவர் வாங்கிய பெர்மிட், விற்ற விபரம்
யாவும் ஆதாரத்துடன் மெயில் அனுப்பி வைத்து விட்டாhன்
எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டு
என்ன இருந்தாலும் தன் மக்களை காண அவர்
தன் கலால் நடந்து வருகிறாரே என்று சொல்லி வைத்தேன்
அவனோ அப்பவும் சளைக்காமல் எனக்கு
இன்னொரு மெயில் அனுப்பி வைத்தான்
அதில் தலைவர் தனக்கு தன் கையால் குடை பிடிக்காமல்
தனக்கு குடை பிடிக்கவென்றே இன்னொருவனை
சம்பளத்திற்கு வேற வைத்திருக்கிறார்.
ச்சே என்ன தலைவருங்கடா இவனுகள்?
இவனுகளை நம்பி ஒரு இரண்டு வரிகூட
பாராட்டி எழுத முடியவில்லையே?
கொடுமை!

No comments:

Post a Comment