Tuesday, July 30, 2019

காணவில்லை.

•காணவில்லை.
யாராவது கண்டால் ராஜினாமாக் கடிதத்தை இப்போதும்
பொக்கற்றில் வைத்திருக்கின்றாரா என கேட்டுச் சொல்லுங்;கள்!
தீர்வு வரவில்லை என்றால் உடனே ராஜினாமா செய்வேன். கடிதம் தயாராக பாக்கெற்றில் வைத்திருக்கிறேன் என்று சுமந்திரன் கடந்த வருடம் கூறினார்.
அவர் கூறிய தவணை கடந்துவிட்டது. அவர் வரும் என்று கூறிய தீர்வு இன்னும் வரவில்லை.
இந்த ஆட்சியில் இனி தீர்வு வராது என்பதை சம்பந்தர் ஐயாகூட ஒத்துக் கொண்டு ஆட்சிக்கு எதிராக எச்சரிக்கை விட்டுள்ளார்.
ஆனால் சுமந்திரன் தான் கூறியபடி தனது ராஜினாமாக் கடிதத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அக் கடிதம் இப்போதும் அவர் பாக்கெற்றில் இருக்கிறதா?
அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் எங்கேயாவது ஐஸ்கிறீம் கடை திறப்பு விழாவில் இருப்பார். பாருங்கள்.
ஆனால் அவரை “மானஸ்தன்” என்று வேறு அவரது சிஷ்யர்கள் எழுதி வருகிறார்கள். அப்படியென்றால் ஆள் ஏதாவது ஏடகூடாமாக முடிவு எடுத்தவிடப் போறார்? எனவே யாராவது கண்டால் உடனே எழுதுங்கள்.
குறிப்பு- சுமந்திரனை நாம் இலகுவாக “எருமை” என்று திட்டிவிட முடியும். ஆனால் அத்தனை இலகுவாக ஒரு எருமையை “சுமந்திரன்” என்று திட்டிவிட முடியாது ( இது சிரிப்பதற்கு மட்டும்)

No comments:

Post a Comment