Tuesday, July 30, 2019

ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை இன்று முன் நகர்த்திச் செல்பவர்கள்யார்?

•ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை
இன்று முன் நகர்த்திச் செல்பவர்கள்யார்?
இரண்டு சொகுசு பங்களா பெற்று அனுபவித்து வரும் சம்பந்தர் அய்யாவா இன்று பொராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்கிறார்?
இல்லை. இல்லவேயில்லை.
அப்படியென்றால் 5 கோடி ரூபா சொகுசு வாகனத்தில் மகனுடன் பவனி வருகிறாரே மாவை சேனாதி ராசா, அவரா போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்கிறார்?
இல்லை. இல்லவேயில்லை.
அப்போ மகிந்த ராஜபக்சவை எல்லாம் வரவழைத்து தன் மணிவிழாவைக் கொண்டாடினாரே வித்தியாதரன, அவரா இன்று போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்கிறார்?
இல்லை. இல்லவேயில்லை.
அப்போ யார்தான் இன்று ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்பவர்கள்?
இரண்டு வருடங்களாக வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வீதியில் உட்கார்ந்து போராடுகிறார்களே காணாமல் போனவர்களின் உறவுகள், அவர்களே இன்று போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்பவர்கள்.
தன் சொந்த நிலத்தைக் கேட்டு வீதியோரத்தில் தாயுடன் படுத்து உறங்குகிறதே அந்த கேப்பாபுலவு குழந்தை,. அதுதான் இன்று போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்கிறது.
ஆம். வழிநெடுக எந்தவொரு சிறு துரோகமும் இன்றி போராடுகிறார்களே இவர்களே இன்று ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை முன் நகர்த்துபவர்கள்.
நாளை வரலாறு இந்த எளியவர்களையே நினைவில் கொள்ளும்.

No comments:

Post a Comment