Tuesday, July 30, 2019

•சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கப்போவது யார்?

•சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கப்போவது யார்?
அடுத்து வரும் தேர்தலில் சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரன் ஆகியோர் தோல்வியடைவது உறுதி.
ஆனால் இவர்களை தோற்கடிக்கப்போவது யார் என்று பார்த்தால்,
சிலர் கNநை;திரகுமார் பொன்னம்பலம் அணியினர் என்று நினைக்கலாம்
இன்னும் சிலர் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அணியினர் என்று நினைக்கலாம்
வேறு சிலர் டக்ளஸ் தேவானந்தா அணியினர் என்றும்கூட நினைக்கலாம்.
ஆனால் இவர்கள் அனைவரும் வென்றாலும்கூட சம்பந்தன் சுமந்திரனை தோற்கடிக்கப்போவது இவர்கள் இல்லை.
3 முக்கிய விடயங்களே சம்பந்தர் மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கப் போகின்றன. அவையாவன,
•அரசியல் கைதிகளின் பிரச்சனை
•காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனை
•இடம் பெயர்ந்தோரின் மீள் குடியேற்றப் பிரச்சனை.
ஒரு வருடத்தில் ஏன் தீர்வு பெற்று தரவில்லை என்பதற்குகூட ஏதாவது ஒரு காரணத்தை சம்பந்தர் மற்றும் சுமந்திரனால் கூறிவிட முடியும்.
ஆனால் மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களுக்கும் எந்தவொரு காரணத்தையும் இவர்களால் கூறிவிட முடியாது.
மக்கள் மனங்களில் பெருங் கோபக் கனலாக சுழன்று கொண்டிருக்கும் இந்த விடயங்கள் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கப் போகின்றன.
ஒரு தும்புத் தடியை நிறுத்தினால்கூட அது இலகுவாக இவர்களை வென்றுவிடும் நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில் சில செம்புகள் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வதற்காக “சம்பந்தர் ஐயா படுத்துக் கொண்டே nஐயிப்பார்” என்று பொய் எழுதி வருகின்றன.
இதை சிங்கள பொலிஸ் பாதுகாப்பு மத்தியில் இருக்கும் சம்பந்தர் சுமந்திரன் ஆகியோர் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.
குறிப்பு- படங்களைப் பார்த்தவுடன் இதுவும் ஏதோ குடை பற்றிய பதிவு என்று சிலர் நினைத்திருக்க கூடும். அவ்வாறு தோன்றியிருந்தால் அவர்கள் என்னை மன்னிப்பார்களாக.

No comments:

Post a Comment