Tuesday, July 30, 2019

செய்தி- புலிகளின் வரலாற்றை என்னால் மட்டுமே எழுத முடியும். எழுதினால் நாடு தாங்காது – மாவை சேனாதிராசா பேட்டி

செய்தி- புலிகளின் வரலாற்றை என்னால் மட்டுமே எழுத முடியும். எழுதினால் நாடு தாங்காது – மாவை சேனாதிராசா பேட்டி
ஐயோ! லூசு தாத்தா,
இத்தனை நாளும் “போராட்டம் வெடிக்கும்” என்று மிரட்டினாய்
இப்ப புலிகளின் வரலாற்றை எழுதப் போறன் என்கிறாய்
அப்ப அமிர் கொலைக்கு றூட்டு போட்டு கொடுத்த
அந்த கறுப்பு ஆடு நீதான் என்பதையும் எழுதுவியா தாத்தா?
இரண்டு வருடம் சிறையில் இருந்ததைக் காட்டி
இருபது வருடம் எம்பியாக இருந்து விட்டாய்
ஊரான் வீட்டு பிள்ளை எல்லாத்தையும் பிடித்து
அமிர் மகன் பகிரதன் இயக்கத்திற்கு அனுப்பினாய்
ஆனால் உன் வீட்டு பிள்ளை எல்லாத்தையும்
இந்தியா கொண்டு சென்று படிக்க வைத்தாய்
நீ பதவி அனுபவிப்பது பத்தாது என்று
இப்ப உன் மகனுக்கும் பதவி வாங்கி கொடுத்துவிட்டாய்
நீ மட்டும் உயரமானவன் இல்லை
உன் வீட்டுக்கு நீ கட்டும் மதில்கள் கூட உயரமானவைதான்.
மாவிட்டபுரத்தில் பங்களா, கொழும்பில் பங்களா சென்னையில் பங்களா
இதெல்லாம் எந்த உழைப்பில் கட்டியவை என்பதையும் எழுதுவாயா?
பவனி வர 5கோடி ரூபா சொகுசு வாகனம்
கூட வர சிங்கள பொலிஸ் பாதுகாப்பு
இது பத்தாது என்று குடை பிடிக்க ஒரு ஊழியர்.
புலிகள் இருந்திருந்தால் இதெல்லாம்
உன்னால் அனுபவிக்க முடியுமா என்பதையும் எழுது தாத்தா

No comments:

Post a Comment