Tuesday, July 30, 2019

•இவர்கள் யார்? இவர்கள் செய்த தவறு என்ன?

•இவர்கள் யார்?
இவர்கள் செய்த தவறு என்ன?
இவர்கள் தமிழர்கள். அதுவும் இந்து தமிழர்கள்.
இவர்கள் தமிழ் இனத் தலைவர் சம்பந்தர் ஐயாவின் தொகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் மட்டுமல்ல இலங்கை மக்கள் அனைவரும் ஏழைகளாக இருப்பதற்கு புலிகளே காரணம் என்றார்கள்.
புலிகளை அழித்தால் இவர்கள் வாழ்வில் வசந்தம் வரும் என்றார்கள். கிழக்கில் உதயம் வரும் என்றார்கள்.
புலிகளை அழித்து பத்து வருடமாகிவிட்டது. வடக்கில் வசந்தம் வந்தது. கிழக்கில் உதயம் வந்தது. ஆனால் இவர்கள் வாழ்வில் எந்த மாற்றமும் வரவில்லை.
இவர்கள் வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 கோடி ரூபா சொகுசு வாகனம் வந்தது. கொழும்பில் சொகுசு பங்களா கிடைத்தது. சிங்கள பொலிஸ் பாதுகாப்பும் கிடைத்தது.
ஆனால் இவர்களுக்கு இதுவரை எதுவுமே கிடைக்கவில்லையே, அது ஏன் என்று சம்பந்தர் ஐயாவிடம் கேட்டால் “ இவர்களுக்கு வீடு வேலை கேட்டால் அப்புறம் உரிமை கேட்க முடியாது” என்கிறார்.
“உங்களுக்கு இரண்டு சொகுசு பங்களா கேட்டு வாங்கலாம். இந்த மக்களுக்கு வேலை கேட்டு வாங்க முடியாதா?” என்று சம்பந்தர் ஐயாவிடம் கேட்டால் அவருக்கு கோபம் வருகிறதோ இல்லையோ ஆனால் அவரின் செம்புகளுக்கு கோபம் வந்துவிடுகிறது.
உடனே ஓடி வந்து “நீங்கள் லண்டனில் இருக்கிறீர்கள். எத்தனை பேருக்கு வீடு கட்டிக் கொடுத்தீர்கள்?” என்று எம்மை பார்த்து கேட்கிறார்கள்.
அடே முட்டாள் பயலுகளே நாம்தான் வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென்றால் அப்பறம் சம்பந்தர் ஐயாவுக்கு மாதம் ஒன்னரை லட்சம் ரூபா சம்பளம் எதற்கு? இரண்டு பங்களா எதற்கு? 6 சொகுசு வாகனம் எதற்கு? 32 சிங்கள பொலிஸ் காவல் எதற்கு?
ஆனாலும் பலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களிடம் பணம் பெற்று இந்த ஏழை மக்களுக்கு அபிவிருத்தி செய்ய மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முயன்றார். அதற்கும் இலங்கை அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை.
இந்த அரசு தானும் தமிழ் மக்களுக்கு பணம் வழங்கவில்லை. வெளிநாட்டில் இருந்து மாகாணசபை பணம் பெறவும் அனுமதி வழங்கவில்லை.
இத்தனைக்கு பிறகும் இந்த அரசை கவிழாமல் சம்பந்தரும் சுமந்திரனும் தாங்கிப் பிடித்தால் அதனை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும்?
யுத்தத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாக்களை திரட்டிய இந்த அரசு மக்களுக்கு அபிவிருத்தி செய்ய பணம் இல்லை என்கிறது.
அப்படிப்பட்ட இந்த அரசை நல்லாட்சி அரசு என்றும் அதனை தாமே தாங்கிப் பிடிக்கிறோம் என்றும் சம்பந்தரும் சுமந்திரனும் பெருமையாக கூறும்போது அதனை பார்த்துக் கொண்டு எப்படி மௌனமாக இருக்க முடியும்?
செம்புகளே! கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் புதில் கூறுங்கள்.

No comments:

Post a Comment