Tuesday, July 30, 2019

•ஞாயன்மார்களே! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!

•ஞாயன்மார்களே!
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!
துரையப்பாவை பிரபாகரன் சுட்டதால் தவறு என்கிறீர்களா? அல்லது
யார் சுட்டிருந்தாலும் தவறு என்கிறீர்களா?
ஏனென்றால் ஈழப் போராட்டத்தின் முதல் தியாகி என்று அழைக்கப்படும் சிவகுமாரன் துரையப்பாவை கொல்ல பல தடவைகள் முயன்றவர்.
ஒருவேளை சிவகுமாரனால் கொல்லப்பட்டிருந்தாலும் தவறு என்பீர்களா?
அதைவிட, அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபனும் துரையப்பாவை கொல்ல முயன்றவர்தானே. ஒருவேளை அவரால் துரையப்பா கொல்லப்பட்டிருந்தாலும் தவறு என்பீர்களா?
அட இவர்கள் எல்லோருக்கும் துரையப்பாவை “துரோகி” என்று கூறியவர் அமிர்தலிங்கம். அப்படியென்றால் அமிர்தலிங்கத்தையும் தவறு என்பீர்களா?
துரோகிகளை சுட்டுக் கொன்ற இளைஞர்களுக்கு அதரவளித்து வழக்கு பேசியவர்கள் சிவசிதம்பரம் போன்றவர்களையும் தவறு என்பீர்களா?
ஏனென்றால் நீங்கள் எய்தவன் இருக்க அம்பை நோக மாட்டிர்கள் என நம்புகிறேன்.
பதில் தருவீர்களா?

No comments:

Post a Comment