Tuesday, July 30, 2019

எங்கே தைரியம் இருந்தால் இந்த கொலையை செய்வித்தவர்களை கண்டியுங்கள் பார்க்கலாம்!

•எங்கே தைரியம் இருந்தால் இந்த கொலையை
செய்வித்தவர்களை கண்டியுங்கள் பார்க்கலாம்!
1983 கலவரத்தை அடுத்து அமிர்தலிஜங்கம் சிவசிதம்பரம் சம்பந்தர் எல்லாம் நாட்டை விட்டு ஓடி தமிழ்நாட்டில் இருந்தார்கள்.
அப்போது நாட்டில் மக்களோடு மக்களாக இருந்தவர்கள் ஆலாலசுந்தரம் , தர்மலிங்கம், இராசலிங்கம், துரைரத்தினம் ஆகிய தலைவர்கள்.
இவர்கள் தமிழ் தலைவர்கள் மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆவர்.
இவர்கள் நால்வரையும் சுட்டுக் கொல்லும்படி இந்திய உளவுப்படையான றோ வானது ரெலோ இயக்கத்திற்கு கட்டளை இட்டது.
றோ அமைப்பு கட்டளை இட்டபடி ரேலோ இயக்கம் யாழ் பகுதியில் இருந்த தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரத்தை சுட்டுக் கொன்றது.
ஆனால் உள் முரண்பாடு காரணமாக வடமராட்சியில் இருந்த ரெலோ இராஐலிங்கத்தையும் துரைரத்தினத்தையும் சுடவில்லை.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் அப்போது அமிர்தலிங்கம், சம்பந்தர் போன்றவர்கள் நாட்டில் இருந்திருந்தால் அவர்களையும் இந்திய உளவுப்படை சுடச் சொல்லியிரக்கும்.
சரி. இப்போது விடயத்திற்கு வருவோம்.
துரையப்பாவை சுட்டது யாராக இருந்தாலும், சுடச் சொன்னது யாராக இருந்தாலும் தவறுதான் என்பவர்கள் இப்போது இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை சுடச் சொன்ன இந்திய உளவு அமைப்பை தவறு என்று கண்டியுங்கள் பார்க்கலாம்.
எங்கே தைரியசாலிகள் வரிசையாக வாருங்கள் பார்க்கலாம்.

No comments:

Post a Comment