Tuesday, July 30, 2019

•புத்த பிக்குகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை

•புத்த பிக்குகள்
சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை
அவர்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே
ராஐhங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என புத்த பிக்குகள் எச்சரிக்கை விட்டுள்ளனர்.
இனவாதம் பேசும் பிக்குகள் பலர் சிறிய பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அது குறித்த வீடியோவையும் அவர் தனது பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பிக்குகள் கஞ்சா அடிக்கும் ஆதாரங்களையும்கூட அவர் வெளியிட்டிருப்பதாக அறிய வருகிறது.
அவர் தெரிவித்திருக்கும் விடயங்கள் தவறானவை என்றால் சம்பந்தப்பட்ட பிக்குகள் மான நஷ்ட வழக்கு தொடர முடியும்.
அதைவிடுத்து பிக்ககளின் தவறுகளை வெளியிடக்கூடாது என்பதும் அமைச்சரை கைது செய்ய வேண்டும் என மிரட்டுவதும் தவறாகும்.
இது இலங்கையில் பிக்ககள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று மட்டுமல்ல விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என நினைக்க தோன்றுகிறது.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அது புத்த பிக்குவாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
அவர்களுடைய தவறுகளை பொதுவெளியில் விமர்சிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
அமைசர் ரஞ்சன் ராமநாயக்காவின் அரசியல் குறித்து எமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் பிக்குகள் குறித்த அவரது விமர்சனம் வரவேற்கத்தக்கது.
இந்த விடயத்தில் நாம் ரஞ்சன் ராமநாயக்கா பக்கமே நிற்க வேண்டும்.

No comments:

Post a Comment