Tuesday, July 30, 2019

அன்று மட்டுமல்ல இன்றும்கூட தமிழன் நிலை இதுதான்.

அன்று மட்டுமல்ல இன்றும்கூட தமிழன் நிலை இதுதான்.
தமிழன் என்றால் நடுவீதியில் வைத்து நிர்வாணமாக்கலாம்.
தமிழன் என்றால் தாக்கலாம். கொன்று குவிக்கலாம்.
எந்த விசாரணையும் இல்லை. தண்டனையும் இல்லை.
இலங்கையில் தமிழன் இரண்டாம்தரப் பிரஜையாக இல்லை
மனிதப் பிரஜையாகக்கூட மதிக்கப்படவில்லை
இதற்கு எதிராக தமிழன் அகிம்சை வழியில் போராடினாhல்
ஈவு இரக்கம் இன்றி ஏறி மிதிப்பார்கள்
உலகமே வேடிக்கை பார்க்கும்.மௌனம் காக்கும்
வேறு வழியின்றி தமிழன் ஆயுதம் ஏந்தினால்
“பயங்கரவாதி” என்று அந்த உலகமே சேர்ந்து கொல்லும்
காயம் இன்றி கனவு காணலாம்
ஆனால் வலி இன்றி போராட முடியாது
இழப்பின்றி புரட்சி வெல்ல முடியாது!

No comments:

Post a Comment