Tuesday, July 30, 2019

ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்று வாக்கு கேட்டார்.

ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்று வாக்கு கேட்டார்.
இலங்கை அரசை நம்ப முடியாதே என்று கூறியபோது
தன்னை நம்பி தனக்கு வாக்கு போடுங்கள் என்றார்.
அப்பறம், ஒரு வருடத்தில் தீர்வு வரவில்லையே என்று கேட்டபோது
அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்றார்
ஒவ்வொரு வருடமும் தீபாவளி வந்து போகிறதே, அந்த தீர்வு மட்டும் ஏன் வரவில்லை என்று கேட்ட போது
ஐயா எழும்பி நிண்டு 72 நிமிடம் பேசினாரே என்கிறார்கள் அவரது செம்புகள்
சரி அப்படி என்னதான் ஐயா 72 நிமிடம் பேசினார் என்று கேட்டால்
“தமிழ் மக்கள் இனியும் நம்பி ஏமாறத் தயாரில்லை” என்று ஐயா இடித்துரைத்தார்; என்கிறார்கள்.
அடேய் கூமுட்டை நாய்களா! இதைத்தானாடா நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறோம்.
1948ல் இருந்து எந்த தீர்வும் தராமல் ஏமாற்றி வரும் இலங்கை அரசு சம்பந்தர் ஐயா கேட்டவுடன் மட்டும் எப்படியடா கொடுத்துவிடும் என்று நம்புறியள்?
ஆனால் சம்பந்தர் ஐயா கூறியது ஒன்று மட்டும் உண்மை. தமிழ் மக்கள் இலங்கை அரசை மட்டும் அல்ல சம்பந்தர் ஐயாவையும் நம்பி ஏமாற இனி தயாரில்லை.

No comments:

Post a Comment