Tuesday, July 30, 2019

தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?

தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?
இதுவரை தேர்தல் பாதைமூலம் தீர்வு பெற முடியும் என்று கூறிவந்த சம்பந்தர் ஐயா இனி ஆயுதம் தூக்க வேண்டி வரும் என்கிறார்.
புலிகள் ஆயுதம் தூக்கி போராடியதால் “பயங்கரவாதிகள்” என்று கூறிய சம்பந்தர் ஐயா இப்போது அவர்கள் ஆயுதம் தூக்கியது நியாயம் என்கிறார்.
அகிம்சை பாதை மூலம் தமிழ் மக்கள் தீர்வு பெற முடியும் என கூறிவந்த சம்பந்தர் ஐயா அதன் மூலம் எதையும் பெற முடியவில்லை என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார்.
இதுவரை இந்தியா மூலம் தீர்வு பெற முடியும் என கூறிவந்த சம்பந்தர் ஐயா இந்தியாவும் தம்மை ஏமாற்றிவிட்டது என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்.
புலிளை அழித்த பின்பு தீர்வு தருவதாக கூறிய அனைவரும் இதுவரை தீர்வு தரவில்லை என்பதையும் அவர்களுக்கு தாம் காட்டியும் கூட்டியும் கொடுத்ததையும் ஒத்துக் கொண்டுள்ளார்.
என்ன இப்படி மாறி மாறி கூறுகிறீர்களே? என்று நாம் சம்பந்தர் ஐயாவிடம் கேட்கப் போவதில்லை.
ஏனெனில் தனது பதவிக்காகவும் பங்களா நலன்களுக்காகவும் அவர் இப்படி மாறி மாறி கதைப்பார்.
அவர் இப்போது இப்படி பேசியது எமக்கு ஆச்சரியம் இல்லை. மாறாக அவர் இப்படி பேசவில்லை என்றால்தான் எமக்கு ஆச்சரியம்.
ஆனால் நாம், தமிழ் இன விடுதலைக்கான பாதை ஆயுதப் போராட்டமே என்று கூறியபோது “தமிழ் மக்களை அழிக்க வேண்டாம் நீங்கள் வந்து தூக்குங்கள்” என்று கூறியவர்கள் எப்போது ஆயுதம் தூக்கப் போகிறீர்கள் என்று சம்பந்தர் ஐயாவிடம் கேட்பார்களா?
போராட்டம் வெடிக்கும் என்று கூறிய மாவை சேனாதிராசாவிடம் “எப்போது குண்டைக் கட்டிக் கொண்டுபோய் குதிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்பார்களா?
தேர்தல் பாதை மூலமோ அல்லது அகிம்சை போராட்டத்தின் மூலமோ அல்லது இந்தியா மூலமோ தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம்.
தமிழ் இன விதலைக்கான பாதை ஆயுதப் போராட்டமே என்பதையும் நாம் நன்கு அறிவோம். ஆனால் அதை இந்தளவு விரைவில் சம்பந்தர் ஐயா தன் வாயால் கூறுவார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.

No comments:

Post a Comment