Tuesday, July 30, 2019

இவர்கள் தமிழ் மாணவிகள் இவர்கள் இந்து மாணவிகளும்கூட

இவர்கள் தமிழ் மாணவிகள்
இவர்கள் இந்து மாணவிகளும்கூட
இவர்கள் தினமும் 18 கி.மீ நடந்து சென்று படிக்கிறார்கள்.
தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களும்
இந்து மதத்திற்காக குரல் கொடுப்பவர்களும்
இவர்களுக்காக ஏன் இன்னும் இரங்கவில்லை என்று நாம் கேட்கலாம்.
இவர்களுக்காக இரங்குவதா அவர்களின் வேலை? ஏன் லண்டனில் இருக்கும் நீங்கள் இரங்கி ஒரு பஸ் ஏற்பாடு செய்திருக்கலாமே என்று அவர்களது செம்புகள் பதில் எழுதுவார்கள்.
என்ன செய்வது? தமிழன் தலைவிதி இப்படியாக இருக்கிறதே!
சரி. இது பற்றி சம்பந்தர் ஐயாவிடம் கேட்டால்,
"ஆம். செய்யலாம்தான். நான் கேட்டால் ரணில் உடனே நூறு பஸ் தருவார்தான். ஆனால் அப்பறம் உரிமை கேட்க முடியாதே” என்று பதில் தருவார்.
பாவம் இந்த மாணவிகள். “அப்ப நீங்க மட்டும் எப்படி ஐயா இரண்டு சொகுசு பங்களா, 6 சொகுசு வாகனம், எல்லாம் கேட்டு வாங்கினீர்கள்? என்று திருப்பி கேட்க முடியாதே.
ஆனால் ஒன்று மட்டும் நடக்கும்.
அடுத்த தேர்தலுக்கு வோட்டு கேட்டு போகும்போது நடந்து நடந்து தேய்ந்த தமது பிஞ்ச செருப்பால் இந்த மாணவிகள் சம்பந்தர் ஐயாவுக்கு பதில் தருவார்கள்.

No comments:

Post a Comment