Tuesday, July 30, 2019

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்குகள் மீது

• பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்குகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அரசு
அதனை அம்பலப்படுத்திய அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா மீது நடவடிக்கை எடுக்க முனைகிறது?
இனவாதம் பேசும் புத்த பிக்குகள் சிலர் கஞ்சா புகைப்பதையும் சீட்டு விளையாடுவதையும் வீடியோ மூலம் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா எற்கனவே அம்பலப்படுத்தியிருந்தார்.
தற்போது பெரிய புத்த பிக்குகள் சிறுவர் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
அதுவும் பாதிக்கப்பட்ட சிறுவர் பிக்ககள் மட்டுமல்ல அவர்களது பெற்றோர்களும் அமைச்சரை சந்தித்து தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளை கூறியுள்ளனர்.
அவர்கள் தமக்கு நீதியைப் பெற்று தருமாறு அமைச்சரிடம் கோரியுள்ளனர்.
ஆனால் அரசோ பாலியல் குற்றம் இழைத்த பிக்குகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அக் கொடுமைகளை அம்பலப்படுத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடக்க முனைகிறது.
ஒரு அமைச்சராலேகூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் வேறு யார்தான் இவர்களுக்குரிய நீதியை பெற்றுக் கொடுக்க முடியும்?
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் புத்த பிக்ககள் மட்டும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க முயல்கிறார்கள்.
இந்த அவலம் புத்த மதத்தில் மட்டுமல்ல அனைத்து மதங்களிலும் காணப்படுகிறது.
18 வயதிற்கு குறைந்த சிறுவர்
• சட்டப்படி வேலை செய்ய முடியாது
• சட்டப்படி திருமணம் செய்ய முடியாது
• சட்டப்படி வாக்களிக்க முடியாது
• ஆனால் சட்டப்படி மத குருவாக முடியும்.
என்ன கொடுமை இது?
அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா கரத்தை வலுப்படுத்துவோம்
மதக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்
குறிப்பு – அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா வெளிப்படுத்திய வீடியோ காணொளி கீழே தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment