Tuesday, July 30, 2019

ஈழ அகதி மாணவனின் கல்விக்கு உதவி வழங்கிய

•ஈழ அகதி மாணவனின் கல்விக்கு உதவி வழங்கிய
சிவகுமார் குடும்பத்தினருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்!
36 வருடமாக அகதிகளாக இருந்து வரும் ஈழ தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது.
இதனால் இவ் அகதிகள்; உயர் கல்வி மற்றும் வேலை வாயப்புகள் போன்றன பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள சிவகுமார் போன்ற தமிழர்கள் சிலர் தம்மால் இயன்ற உதவிகளை வழங்குகின்றனர்.
ஈழ அகதி மாணவன் ராமநாதன் கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெறுவதற்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் உதவி புரிந்துள்ளனர்.
அதுமட்டுமல்ல இந்த அகதி மாணவன் அடுத்து சீனா சென்று மேலும் கல்வி கற்க உள்ளார். அதற்குரிய செலவுகளையும் தான் ஏற்பதாக சிவகுமார் அறிவித்துள்ளார்.
உண்மையில் சிவகுமார் குடும்பத்தினரின் இந்த உதவி பாராட்டுக்குரியது. அவர்களுக்கு எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனியாவது இந்திய அரசு ஈழ அகதிகள் மீது இரக்கம் காட்டுமா? அவர்கள் உயர் கல்வி பெற அனுமதி வழங்குமா?

No comments:

Post a Comment