Saturday, September 26, 2020

ஜீன் 15ம் திகதி 20 இந்திய ராணுவத்தினரை சீனா எல்லையில் கொன்றது.

ஜீன் 15ம் திகதி 20 இந்திய ராணுவத்தினரை சீனா எல்லையில் கொன்றது. ஜீன் 19ம் திகதி சீனா வங்கியிடம் இந்தியா 9000 கோடி ரூபா கடன் வாங்கியுள்ளது. அதுவும் ஒருமுறை அல்ல இரண்டு தவணைகளில் பெற்றுள்ளது. ஆனால் ஜீலை 29ம் திகதி இந்திய அரசு 59 சீனா அப்ஸ்களை தடை செய்துள்ளது. ஒரு அடி நிலத்தைக்கூட சீனா கைப்பற்ற நாம் அனுமதிக்கவில்லை என பிரதமர் மோடி கூறினார். ஆனால் 38000 சதுர கிலோ மீற்றர் பரப்புள்ள நிலத்தை சீனா கைப்பற்றிவிட்டது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் இப்போது ஒத்துக்கொள்கிறார். அதாவது கிட்டத்தட்ட கேரள மாநில நிலப்பரப்பை இந்தியா சீனாவிடம் இழந்துள்ளது. ஆனால் இந்திய பிரதமரோ மயிலுக்கும் வாத்துக்கும் தீனி போட்டு போட்டோ பிடிப்பதில் அக்கறையாக இருக்கிறார். இந்த விபரங்களை அறியாமல் ஈழத்து ஆய்வாளர் ஒருவர் சீனா ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழீழம் எடுக்க இந்திய அரசு உதவப்போகிறது என்று எழுதிக் கொண்டிருக்கிறார். இலவு காத்த கிளி!

No comments:

Post a Comment